கலாபவன் மணி மரணத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்கள்

231

கலாபவன் மணி மரணத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்கள் - Cineulagam

கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் நடிகர் சாபு மீது போலீசாருக்கு சந்தேகம் எழ, அவரிடம் விசாரணை நடத்தினர். சாபுவும் நான் அவருடன் மது அருந்தவே இல்லை, இப்படி வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.

தற்போது மணியின் அவுட் ஹவுஸில் வேலை பார்த்த மூவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன். ஞாயிறு காலை கலாபவன் மணி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டபோது, அவுட் ஹவுஸை சுத்தப்படுத்தியது அவரது நண்பர்களும் வேலையாட்களுமான இந்த மூவர்தான்.

அந்த அவசரத்தில் அவுட் ஹவுஸை சுத்தப்படுத்தியது ஏன்? சுத்தப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கே முன்தினம் இரவு அவர்கள் அமர்ந்து குடித்த பாட்டில் உட்பட எல்லாவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்கிறார் மணியின் சகோதரர்.

SHARE