
தேவையான பொருட்கள் :
உளுந்து – 1 கப்
சீனி கல்கண்டு – அரை கப் (தூளாக்கவும்)
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும்போது கல்கண்டை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வடை தயார் செய்வதற்கு ஏற்ப மாவு கலவை கெட்டியாக இருக்க வேண்டும். அதிக வழுவழுப்பாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும். பிறகு மாவை வடைகளாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியை சிறு தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் போட்டு வடைகளாக பொரித்தெடுக்கவும்.
சூப்பரான கல்கண்டு வடை ரெடி.