மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 10.30மணியளவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் மகிழூரை சேர்ந்த ரவிகரன் (35வயது)என்பரே படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.