கழிவறையில் கப்படிக்குதா? சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ

173

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

பொதுவாக குளியல் அறைகள், கழிவறைகள் என்றாலே துர்நாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் நாம் குளிக்கும் போது, நம் மீதுள்ள கழிவுகள் அனைத்தும் அந்த அறையில் தான் தங்குகின்றது.

இதனால் விரைவில் தொற்று கிருமிகள் உருவாவதுடன் நமது ஆரோக்கியத்திற்கும் தீங்காகிறது.

இதற்கு குறைந்தது வாரம் இருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

  • நமது வீட்டின் குளியல் அறையில் இருக்கும் ஷவரில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு, ஒரு பிளாஸ்டிக் கவரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அதனை ஷவரில் ரப்பர் பேண்ட் பயன்படுத்திக் கட்ட வேண்டும். பின் ஒரு மணிநேரம் கழித்து, அதனை தேய்த்துக் கழுவினால், ஷவர் பளிச்சென்று புதியதாக இருக்கும்.
  • வாஷிங் மெஷனில், சுடுநீரை நிரப்பி, அதில் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து, 1 மணிநேரம் கழித்து வேகமாக ஓட வைத்து, நிறுத்தி பின் அதில் உள்ள நீர் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். இதனால் வாஷிங் மெஷினில் உள்ள கிருமிகள் உடனே வெளியேறி, புதியது போல காணப்படும்.
  • குளிக்கும் அறையில் தரை அசிங்கமாக கறையுடன் இருந்தால், 1/2 கப் பேக்கிங் சோடாவில், 1/4 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1 டீஸ்பூன் சோப்பு தூள் பயன்படுத்தி கலந்து, தரையில் ஊற்றி தேய்த்து கழுவ வேண்டும். இதனால் தரை பளிச்சென்று மாறிவிடும்.
  • குளியல் தொட்டியில் இருக்கும் அழுக்கை முழுமையாக வெளியேற்றுவதற்கு, கிரேப் ஃபுரூட்டை இரண்டாக வெட்டி, குளியல் தொட்டியில் உப்பைத் தூவி, பின் பாதி கிரேப் ஃபுரூட்டைக் கொண்டு தேய்த்து, கழுவ வேண்டும்.
  • நீங்கள் பாத்திரம் கழுவும் தொட்டியில் துரு பிடித்திருந்தால், எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் பைட்ரேட் சேர்த்து கலந்து, டூத் பிரஷ் கொண்டு தொட்டியில் தேய்த்து, பின் நன்றாக தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.
  • நமது வீட்டின் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு, எலுமிச்சை, பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கழிவறையில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்கி, துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
SHARE