கவுதமாலா நாட்டில் எரிமலை வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 50 பேர் மாயம்

125

கவுதமாலா நாட்டில் எரிமலை வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுதமாலா நாட்டில் கடந்த வாரம் பெரும் சீற்றத்துடன் ஃப்யூகோ எனும் எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் 110 பேர் வரை மரணமடைந்தனர். அத்துடன் 200க்கும் அதிகமானோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் உண்டான சாம்பலில் சிக்கிய யூஃபிமியா கார்சியா(50) என்பவரின் உறவினர்கள் 50 பேரை காணவில்லை என தெரிய வந்துள்ளது.

கார்சியா என்பவர் அந்நாட்டில் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறார். அவருடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர் ஆவர். அவரது 75வது தாய் உட்பட, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 பேரை காணவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஃப்யூகோ எரிமலை வெடித்து 8 நாள் ஆகியும், கார்சியாவின் உறவினர் ஒருவரைக் கூட காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE