தன்னால் இப்படியும் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என நிரூபித்தி அசத்தியவர், காக்கா முட்டையில் சிறுவர்களுக்கு தாயாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது குஷ்புவின் தயாரிப்பில் ஹலோ நான் பேய் பேசுகிறேன்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து உதயநிதிதயாரிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக, நடித்து வருகிறார்.
அதன் பின்னர் ஆறாது சினம் என்னும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இரண்டு படங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தற்போது கடும் பிசியாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷிடம் கால்ஷீட் வாங்குவதே மிக கடினமாக உள்ளது.