காங்கேசன்துறையில் காது அறுக்கப்பட்ட இராணுவ சிப்பாய்.

323

 

Armeகாங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று வியாழக்கிழமை (03) இராணுவ சிப்பாய்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்ற சிப்பாய், காது அறுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இருவர் சிறு காயங்களுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்று சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததன் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

SHARE