பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனை பார்க்க பலரும் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது மகன் யோஷித உள்ளிட்ட குழுவினரின் நலன் விசாரிப்பதற்காக அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் பலர் சிறைச்சாலைக்கு வருவதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்சவுடன் விளக்கமறியலில் இருப்பவர்களில் வைத்தியர் ரவிநாத் பிரணாந்து பொகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
யோஷித்த ராஜபக்ச, ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க, அஷான் ரவிநாத் மற்றும் கவினாஷ் திஸாநாயக்கவின் நலம் விசாரிப்பதற்காக கலைஞர்கள் சிலரும் நேற்று சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன, சுதத் ரோஹன, பாலித்த பெரேரா, பாலித பெரேரா, சந்துன் விஜேசிறி, அஜித் லொக்குகே, சம்பத் தென்னகோன் ஆகியோரே சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
CSN தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோஷித உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.