காணமற்போனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையையாவது தெரிவியுங்கள்: கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கம்

291

அந்த சம்பவம் 25 வருடங்களிற்கு முன்னர் செப்டம்பர் 25 ம் திகதி இடம்பெற்றது.நான் இன்றும் அந்த நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், அவ்வேளை நான் செங்கலடியில் உள்ள கிழக்குபல்கலைகழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்,அங்கு 10,000குடும்பங்கள் வாழ்ந்தன.

அங்குள்ள வளாகத்தில் 158 பேர் தஞ்ஞமடைந்திருந்தனர். ஓரு நாள் அங்கு வந்த இராணுவத்தினர் ஆண்களை பெண்களை தனியாக பிரித்து அவர்களை சோதனையிட்டனர், அதன் பின்னர் அவர்களை அவர்கள் அரசபேருந்தில் பலவந்;தமாக எற்றி கொண்டுசென்றனர்.
அதற்கு சில நாட்களிற்கு பின்னர் மேலும் 18 பேர் கொண்டுசெல்லப்பட்டனர், அதன் பின்னர் மீதமிருந்த மக்கள் அந்த முகாம்களை விட்டு அகன்றனர், இறுதியில் செப்டம்பர் 30 1990 அந்த முகாம் மூடப்பட்டது.
அங்கிருந்து இறுதியாக வெளியேறியவன் நானே, இன்றுவரை அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது,அவர்கள் விடுவிக்கப்பட்டனரா அல்லது கொல்லப்பட்டனரா என்பது கூட யாருக்கும் தெரியாது.

அவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்கள் என தெரிவித்தனர்,யாரும் எதனையும் தெரிவிக்கலாம், வழமையாக மக்களை யார் முன்னிலையிலாவது விடுவிப்பது வழமை,ஆனால் இந்தவிடயத்தில் என்னை தவிரவேறு சாட்சிகள் இல்லை, சாட்சிகளாக இருந்த பேராசிரியர் மனோ சபாரட்ணமும், டி சிவலிங்கமும் இறந்துவிட்டார்கள், இன்னும் 20 வருடத்தில் நானும் போய்விடுவேன், அதற்கு பிறகு சாட்சிகள் யார்?

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எந்த மனிதரையும் போல நானும் மன அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளேன். முகாமின் நினைவுகள் என்னை சித்திரவதைசெய்யும் இரவுகளில் நான் தூக்கத்திலிருந்து விழித்து அல்லற்படுகின்றேன்.

2004 இல் காணமற்போனவர்கள் ஆணைக்குழு முன்னிலையில் நான் சமூகமளித்திருந்தேன். அன்றிரவு முகாமிற்கு வந்த இராணுவ அதிகாரிகள் அனைவரினதும் பெயர்களை நான் வழங்கியிருந்தேன், மூன்று நாட்களிற்கு பின்னர் வந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரியின் பெயரையும் தெரிவித்திருந்தேன்,
காணமற்போனவர்களின் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2014இல் நான் சாட்சியமளித்த வேளை தாங்கள் இது குறித்து எதனையும் அறிந்திருக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆணைக்குழுக்கள் எதற்காக? காணமற் போனவர்களிற்கு என்ன நடந்தது என ஆராய்ந்திருக்க வேண்டுமல்லவா?

காணமற்போனவர்கள் திரும்பிவரவேண்டும் என அவர்களின் உறவினர்கள் இன்றும் பூஜைகளில் ஈடுபடுகின்றனர், அவர்கள் இன்னமும் நம்பிக்கையுடன் உள்ளனர், காணமற்போன அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றாவது அவர்களது உறவினர்களிற்கு தெரிவியுங்கள்,
உண்மை கசப்பானதாக இருந்தாலும் அவர்கள் தங்கள் மனங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்,அரசாங்கத்தினால் என்ன செய்ய முடியும், நஸ்ட ஈட்டினை வழங்க முடியுமா? எதற்கு நஸ்டஈடு வழங்கப்போகின்றீர்கள்?

SHARE