காணாமல் போனோரின் உறவினர்கள் முல்லைத்தீவு நகரில் இருந்து சென்று, வடமாகண சபை உறுப்பினர் து.ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தை இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
காணாமல் போனோரை இதுவரை தேடித்தரவில்லை என்றும் காணாமல் போனோரை தேடும் அலுவலக செயலகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் காணமல் போனோர் தொடர்பான செயற்பாடுகளை கண்டித்தும் கொழும்பில் செயலகம் திறப்பதை நிராகரித்தும் மாகண சபை உறுப்பினரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த முற்றுகையில் காணமல் போன இரண்டு பிள்ளைகளை தேடும் தாய் ஒருவர் மயங்கிவிழந்தமை குறிப்பிடத்தக்கது.