‘ஆள்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்’ சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு.திருமதி.பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமாங்கல்யதாரணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர்.
இவர்களின் குடும்ப நிலைவரத்தை கவனத்தில் கொண்டு, சிவனருள் தொழில் பயிற்சி நிலையத்தினர் மனமுவந்தளித்த இருபது ஆயிரம் (20,000) ரூபாய் நிதியை, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் கடந்த 30.07.2016 வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் இரவு 11.00 மணிக்கு திரு.திருமதி.பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினரின் இல்லம் ஏகி கையளித்தனர்.
ஏலவே ஆரம்பச்செலவுகளுக்காக முதல்கட்டமாக, அமெரிக்காவில் வசித்துவரும் உயர்திரு.அம்பலவாணர் குடும்பத்தினர், தமிழர்குரல் (TamilsVoice.Com) செய்திச்சேவை ஊடாக, மனமுவந்தளித்த இருபத்து ஐந்தாயிரம் (25,000) ரூபாய் நிதி கடந்த 09.07. 2016 சனிக்கிழமை அன்று திரு.திருமதி.பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
