காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம்: வீடுகளில் இருந்தவாறு உறவுகள் போராட்டம்

305

 

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தங்களது வீடுகளிலிருந்தபடியே அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை உறவுகள் முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக நீதிகோரி போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் எப்போது திரும்புவார்கள், இந்த விடயத்தில் இலங்கையை நம்பப்போவதில்லை போன்ற வாசகங்களை ஏந்தியே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

SHARE