காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளது

310

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளது. தற்போது அமுலில் உள்ள காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மெக்ஸ்வல் பரணகம தலைமையில் இந்த ஆணைக்குழு இயங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.பெரும்பான்மையானவர்கள் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து நம்பிக்கை கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நடவடிக்கைகள் கைவிடப்பட மாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார். இந்த ஆணைக்குழுவிற்கு பதிலீடாக புதிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்க  அரசாங்கம் அமைக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் மீது சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கோரி வருவதாகவும், இது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகப் பொருத்தமான சட்டமொன்று அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைளை தமது ஆணைக்குழுவினைத் தவிர வேறு எந்த தரப்பினாலும் திறம்பட செய்ய முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

SHARE