காணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்

161

இந்தோனேசியாவில் சுமார் 7 அடி நீளமான மலைப்பாம்பொன்றின் வயிற்றில் இருந்து நபரொருவரின் சடலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

அக்பர் சலுபீரோ என்ற 25 வயது நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின், மேற்கு சுலாவெசியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவ்விளைஞர் காணாமல் போன நிலையில், அப்பகுதியில் பெரிய மலைப்பாம்பொன்றைக் கண்ட அவரின் நண்பர்கள் , சந்தேகத்தில் பாம்பின் வயிற்றைக் கிழித்த போதே அவரது சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE