உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணி முப்படைகளின் வசம் உள்ள நிலையில் , அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.