காணி அமைச்சின் தலையீட்டுடன் மன்னாரில் 72 ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது

201

காணி அமைச்சின் தலையீட்டுடன் மன்னாரில் 72 ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்தார்.

அத்துடன் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு மன்னாரில் பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் வழங்க அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் காணி  மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தொலைத்தொடர்புகள் ,வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு  மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

SHARE