காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

168

மன்னாரில் காணப்படும் காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார்.

மேலும் மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்தும் இந்தபோது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

SHARE