காணொலி காட்சி மூலம் ஆஜராவதற்கான செலவை டக்ளஸ் தேவானந்தா ஏற்பதாக தகவல்!

315

சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராவதற்கு தேவையான செலவுகளை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காணொலி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அதற்கான வசதிகள் இல்லாததால், அந்தக் கருவிகள் அமைக்க தேவையான செலவுகளை ஏற்பதாக டக்ளஸ் தேவானந்தா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

SHARE