காபன் பரிசோதனை அறிக்கையை வைத்துக்கொண்டு மட்டும் முடிவுக்கு வரமுடியாது – வைத்தியகலாநிதி சிவமோகன்

210

வைத்தியகலாநிதி சிவமோகன் பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று மன்னார் மாநில புதைகுழி அறிக்கை வந்துள்ளது. 1499ம் ஆண்டு தொடக்கம் 1819ம் ஆண்டுக்குட்பட்டதாக அது கூறப்பட்டுள்ளது. அறிக்கையை இன்று மக்கள் நம்பவில்லை. 300 வருடங்களாக உக்காத இரும்புகள் அங்கே எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் லேபில்கள் அவர்களினுடைய அறிக்கைக்கு முரணாக காணப்படுகிறது.

உலக வல்லரசுகள் தங்களது வியாபாரத்திற்காகவும் அரசியலுக்காகவும் எத்தனையோ விடயங்களை செய்துவருகிறார்கள். பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் மாற்றுவதில் அவர்கள் வல்லவர்கள். அதற்காக ஒரு உதாரணமும் சொல்லலாம். தென்கிழக்காசிய பிரதேசம் தெங்கு பொருட்களுக்கு பெயர் போன பிரதேசம். அமெரிக்கா போன்ற நாடுகளில் தேங்காய் எண்ணெய்கு கிராக்கி அதிகம்.

அது இன்றும்கூட அவர்களின் உற்பத்தி கோ ஒயில் எனப்படும் வெயிடபில் ஒயிலாகும். தேங்காய் எண்ணெயை விட இந்த வெயிடபில் ஒயில் உடலுக்கு கேடானது. இதை பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்திவிட்டன. ஆனால் அண்மையில் சேர்ந்த பிரதேசர் ஒருவர் ஜேர்மனியில் ஒரு நியூட்ரிசம் சம்பந்தமான மகாநாட்டில் பேசியுள்ளார். கோக்கனட் ஒயில் அவர் கூறுகிறார். அவர்களின் நோக்கம் என்ன? அதிகபடியான பத்திரிகையானது இந்த செய்தியினை வெளிக்கொண்டு வந்தது. அது உண்மையை பொய்யாக்கி வியாபாரத்திற்காக தமது ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள்.

அதைப்போல் ஒன்று தான் மன்னார் புதைகுழி அறிக்கையும். வல்லரசு புலனாய்வு அமைப்புக்களில் சிக்கிய அறிக்கையாகவே நான் பார்க்கிறேன். வலுக்கட்டாயமாக பல்லாயிரக்கணக்கானோர் கொடிய யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஒரு தமிழின படுகொலை பகீரங்கமாக இந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதியை எதிர்பார்த்திருக்கும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்று இந்த நாட்டில் இந்த உலகில் நீதி கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. எனவே காபன் பரிசோதனை அறிக்கையை வைத்துக்கொண்டு மட்டும் முடிவுக்கு வரமுடியாது. மறு பரிசோதனை செய்யப்பட்ட விசாரணை மன்னார் புதைகுழி விடயத்தில் அவசியம் என்பதை இந்த மேலான சபையில் கோரி நிற்கின்றேன்.

SHARE