பொதுவாகவே காலை எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால் மட்டுமே பலருக்கு பொழுது விடியும்.உலகில் பெரும்பாலும் விரும்பி குடிப்பது காபி தான், ஆனால் காபியை விட டீ-யில் அதிக நன்மைகள் உள்ளது.
அதிலும் மூலிகை டீக்களான சீமைச்சாமந்தி அல்லது லாவெண்டரை குடித்தால் மன அமைதியுடன் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதேபோன்று கிரீன் டீயை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன் உடல் எடையும் குறையும். அதுமட்டுமின்றி இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்கள் உடலை கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இஞ்சி டீ, புதினா டீ போன்றவை செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. |