
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 200 கிராம்,
பச்சரிசி மாவு – 50 கிராம்,
மிளகுத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
ஓமம் – சிறிதளவு,
எண்ணெய் – கால் கிலோ,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.
சூப்பரான காரா சேவ் ரெடி.
இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.