நாட்டில் பெய்து வரும் கனமழையில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால், ஆறுகளில் உள்ள முதலைகள் வீடுகளுக்கு படையெடுத்து வரும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், முதலைகள் வீடுகளுக்கு அருகில் வருவது குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
களனி பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் இன்று காலை முதலை ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.