காலி கடற்பரப்பில் இலங்கை கொடியுடன் கைப்பற்றப்பட்ட கப்பல் ஆயுதங்கள் அவன்ட் நிறுவனத்திற்குரியவை:

251

காலி கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை இலங்கை கொடியுடன் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த  ஆயுதங்கள் அவன்ட் கார்டே நிறுவனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டவை என கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.

காலித் றைமுகத்திற்கு கப்பல் செல்வதற்கு முன்னர் அதில் ஆயுதங்கள் இருப்பதாக தங்களிற்கு அறிவிக்கப்படவில்லை, கப்பலின் தலைமை மாலுமி இலங்கையர் என தகவல்கள் வெளியாகியிருந்தன ஆனால் அவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் குறிப்பிட்ட கப்பலில் காணப்பட்ட ஆயுதங்களை ரக்னா லங்கா நிறுவனத்திற்கு வழங்குவதற்காவே எடுத்துச் செல்லப்பட்டவை என கப்பல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் கொடியுடன் செல்லும் கப்பல்களை சோதனையிடுவதற்கான அதிகாரம் கடற்படைக்குள்ளதால் அவர்கள் அதனை சோதனையிட்டனர். அதேவேளை கப்பல் துறைமுகத்திற்கு வழங்கப்பட்ட தகவல்கள் வேறு மாதிரியாக காணப்பட்டதால் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

SHARE