காலி மா நகர சபையின் கீழ் இயங்கும் கராபிட்டிய மருத்துமனைக்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடமானது கேள்விப்பத்திரம் ஊடாக தனியார் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கேள்விப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட நபர் குறித்த இடத்தில் அவரின் சேவையாளர்கள் சிலரை பணியில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இடத்தில், நிறுத்தப்படும் வாகனங்களுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பலர் விசனம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் அனுமதி பத்திரத்திற்கு அமைய குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க 5 ரூபாய்களும் ஒரு நாளுக்கு 15 ரூபாய்களும் அறவிடப்படவேண்டும்.
ஆனால், கேள்விப்பத்திர பத்திரத்தை பெற்றுக் கொண்ட நபர் குறித்த இடத்தில் 5 நிமிடத்திற்கு 20 ரூபாய்களை வசூலிப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.