காலி மீன்பிடித் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது. 

364

இலங்கையின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான காலி மீன்பிடித் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.

இதன் கீழ் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஏல விற்பனை நிலையமும், விற்பனைக் கூடமும் நிர்மாணிக்கப்படும்.

இவற்றுக்கு அப்பால் தங்குமிட வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட உள்ளது.

இந்த வேலைகளுக்காக 22  கோடி ரூபா செலவிடப்படும்.  பிரான்ஸ் அரசாங்கம் நிதியுதவி வழங்க உள்ளது.

SHARE