காலை உணவு விஷமானதில் 20 மாணவர்கள் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட காலை உணவே இவ்வாறு விஷமடைந்தள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதாவது 8 மற்றும் 9 வயதான மாணவர்கள் காலை உணவை உட்கொண்ட பின் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து இவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தக்காளி மற்றும் நெத்திலிக்கருவாடு சேர்க்கப்பட்ட உணவையே இவர்களுக்கு வழங்கியதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.