காவல்துறை கட்டுப்பாட்டில் நடிகர் சங்க தேர்தல் கட்டிடம்

309

தென்னிந்திய நடிகர் சங்கங்களுக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக நாளை (அக்டோபர்.18) சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தப் பள்ளி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு செய்ய வரும் நடிகர், நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஆர்யா மற்றும் நடிகர், நடிகைகள் குஷ்பு, சிம்ரன், சிநேகா, சமந்தா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் வாக்களிக்க இருப்பதால் 600க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்குப்பதிவை செய்தியாளர்கள் பார்வையிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த கேட்டு நடிகர் விஷால் காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்திருந்தார். அதன் பேரில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பெருமளவில் நடிகர், நடிகைகள் வருவதால் அவர்களை பார்ப்பதற்காகவே பொதுமக்கள் கூட்டம் கூடுவர். பொதுமக்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் இந்த சிற்பபு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

SHARE