கிண்ணியா-பைசல் நகர் பகுதியில் இரு இளைஞர்கள் கைது

200

கிண்ணியா – பைசல் நகர் பகுதியில் தம் வசம் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து இளைஞரொருவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 07 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வழங்கிய தகவலையடுத்து மற்றுமொருவரை சோதனையிட்ட போது 25 கிராம் கேரளா கஞ்சாவும், 12 கிராம் கஞ்சா கோப்பியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா, புதுநகர் பகுதியை சேர்ந்த எம்.கே.றினோஸ் (19 வயது) மற்றும் எம்.எப்.அம்ஹர் (19 வயது) என்வர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

 

 

 

SHARE