கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தோற்றது ஏன்? ரணதுங்கா புது விளக்கம்

653
இலங்கை கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தோற்றது தொடர்பாக முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கா விளக்கம் அளித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர் பதவிக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா போட்டியிட்டார். அதேபோல் தலைவர் பதவிக்கு ரணதுங்கா சகோதரர் நிஷாந்தா போட்டியிட்டார்.

இந்நிலையில் அர்ஜுன ரணதுங்கா (80 ஓட்டுகள்) 22 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயந்தா தர்மதாசாவிடமும் (102 ஓட்டுகள்), நிஷாந்தா (56 ஓட்டுகள்) 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் திலங்கா சுமதிபாலாவிடமும் (88 ஓட்டுகள்) வீழ்ந்தனர்.

இது பற்றி ரணதுங்கா கூறுகையில், இன்று மக்களுக்கு கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் அனைத்து சதி வேலையும் தெரிந்து இருக்கும். பாராளுமன்ற உறுப்பினராக என்னால் எங்கும் வெற்றி பெற முடியும்.

ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் துணைத் தலைவர் பதவியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள மாஃபியா கும்பலே காரணம் என்று கூறியுள்ளார்.

ranathunga_reason_002

SHARE