கிளிநொச்சியில் தனியார் மருந்தகம் ஒன்றிற்கு சீல் வைப்பு

246

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்குகிளிநொச்சி நீதவானின் உத்தரவுக்கு அமைய இன்று மாலை ஆறு மணியளவில்குறித்த மருந்தகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான்நீதிமன்ற பதிவாளர் மற்றும் தர்மபுரம் பொறுப்பதிகாரியுடனான குழுவினர்குறித்த மருந்தகத்திற்கு சீல் வைத்து மூடி உள்ளனர்கு

றித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவதுதர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் தர்மபுரம்மயில்வாகனபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவருக்கு மூன்றுமாதங்களிற்கு முன்னர் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றதாக இனம்தெரியாதநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சிறுவர் நன்னடத்தைஅதிகாரிகள் மற்றும் தர்மபுரம் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில்அவ் தனியார் மருந்தாக வைத்தியர் பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டுகருவை கலைத்ததாக குறித்த சிறுமி தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டதைஅடுத்து குறித்த மருந்தாக வைத்தியர் மற்றும் சிறுமியின்கற்ப்பத்திற்கு காரணமான இளைஞன் ஒருவரும் தர்மபுரம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர் படுத்திஉள்ளனர்

வழக்கை விசாரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஏ .ஏ .ஆனந்தராஜ் குறித்த வைத்தியருக்கு ஒருலட்சம் ரூபா தண்டப்பணம் , மற்றும்தலா ஒருலட்சம் வீதம் இரண்டு சதுரப் பிணைகளில் விடுவிக்கவும்சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞனிற்கு பதின்நான்கு நாட்கள்விளக்க மறியலில் வைக்கவும் மருந்தகத்தை சீல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்தே குறித்த மருந்தகம் இன்று சீல் வைக்கப்பட்டதுசிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞன் சிறுமியின் காதலன் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது

SHARE