கிளிநொச்சியில் தொடரும் மழையினால் சாந்தபுரம் கிராமம் பாதிப்பு

297

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சாந்தபுரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதிகளும் கிராமத்தின் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்குவதுடன் அரிப்புக்கும் உள்ளாகிவருகின்றன.

வருடாவருடம் மழை காரணமாக சாந்தபுர வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாகிவிட்டது.

இதன் காரணமாக மழை காலத்தில் சாந்தபுர மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

SHARE