கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மின்தடை

186

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், முழங்காவில் கடற்படை முகாம், முழங்காவில் ஐஸ் தொழிற்சாலை, பல்லவராயன் கட்டு, கிராஞ்சி,வேராவில், வலைப்பாடு, குமுழமுனை, கிராஞ்சி, வேராவில், பல்லவராயன் கட்டு, வெள்ளாங்குளம் 651 ஆவது பிரிகேட் இராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

SHARE