கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் பலி

359

கிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் ரயில் மோதுண்டு நபர் ஒருவர் உயரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதுண்டே குறித்த நபர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்போது, கிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியினைச் சேர்ந்த 32 வயதுடைய குருபரன் சீலன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உயிரிழந்தவரின் சடலத்திற்கு அருகிலிருந்து உயிரிழந்தவரின் கைத்தொலைபேசி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE