கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

188

kell

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில், கிணற்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் ஆகியவற்றை இராணுவத்தினர் மீட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில், கடந்த வாரம் வீட்டைப் பராமரித்து வந்த நபர் குறித்த கிணற்றை இறைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிபொருட்களை அவதானித்துள்ளார்.

எனினும், குறித்த பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக வெடிபொருட்களை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும், வானிலை தற்போது வழமைக்கு திரும்பிய நிலையில், நேற்றையதினம் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போதே இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.kellkell01

 

SHARE