கிளிநொச்சி – கரைச்சி, இராமநாதபுரம் பகுதியில் ஊரெழுச்சி வேலைத்திட்டம்

208

கிளிநொச்சி – கரைச்சி, இராமநாதபுரம் பகுதியில் ஊரெழுச்சி வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிவின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம், சூட்டி கடை வீதி இரண்டாம் கட்டம் தார் வீதியாக செப்பனிடுவதற்கான வேலை நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஆகியோரால் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் கிராம மட்ட அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 

 

SHARE