கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சியில் வன்னேரி சுற்றுலா மையம் ஒரு மைல் கல்- சிறீதரன் எம்.பி

220

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சுற்றலாமையத்தின் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிடுவதற்காக பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விஜயம் ஒன்றை மேற்க்கொண்டு இருந்தார்.
கரைச்சி பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இருந்த போது 2014ம் ஆண்டு பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் அவர்களால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இவ்வலயத்தின் பணிகள் வனவளத்தினைக்களத்தினுடைய உரிமை கோரல் காரணமாக தடுக்கப்பட்டு இருந்தது  இவ்விடயம் மாவட்ட அபிவிருத்தி குழுவில் ஆராய்ப்பட்டதுடன்  மாகாண முதலமைச்சரின் கவணத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டது  அதனைத் தொடர்ந்து  ஏற்ப்படுத்தப்பட்ட தடைகள் களையப்பட்டு மாகாணத்தின் குறித்தொகுப்பட்ட நிதியின் கிழ் ஆறு மில்லியன் ருபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது
அழகியதும் குளிர்மையும் மிக்கதுமான வன்னேரிக்குளச் சூழலில் 12 மேற்பட்ட நாடுகளில் இருந்து பலவகைப்பட்ட பறவை இனங்கள் வந்து செல்வதுடன்டு குளத்தை சூழந்திருக்கின்ற மருதமரங்களின் குளிர்மையும்  சிற்றோடைகளின் போக்கும்  வயல் நிலமும் சுற்றுலாப்பயனிகளை பெரிதும் கவர்கிறது  படகுப்பயணத்தை மேற்க்கொள்ளக்கூடிய இவ் ஏரி சூழ்ந்த பகுதி பனைகளினாலும் பனைவளங்களினாலும் நிறைந்து காணப்படுகின்றது  இதனை அபிவிருத்தி செய்வதன் மூலம்  அதிக அளவிலான உல்லாசப்பயணிகளை கவரவும்  அதன் மூலம் வன்னேரிப்பிரதேசம் பொன் குளிக்கும் சூழலாக மாற்றவும்
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்  மக்கள் பிரதிநிதிகள் சூழல் ஆர்வலர்கள் இணைந்து மேற்க்கொண்ட நடவடிக்கை  முன்னேற்றம் அடைந்திருப்பது கண்டு வன்னேரிக்குள மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இவ் களப்பார்வையில் பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னை நாள் பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர் குணா கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சுரேன்  ஏனைய  செயற்பாட்டாளர்கள்  கலந்துகொண்டனர்.
a1-copy-670x503 a4-copy-670x503 a5-copy-670x503 a7-copy-670x503 a9-copy-670x503 a10-copy-670x503
SHARE