கிளி.தருமபுரத்தில் கசிப்புக்குகை பிடிபட்டது

155
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில் சட்டவிரோதமான மது உற்பத்தி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது  என கிராம மக்கள் தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடா்ந்து தருமபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினா்  வியாழக்கிழமை மாலை (11.08.2016)மேற்கொண்ட நடவடிக்கையின் போதே   2240 போத்தல் கோடாவும், கசிப்பு உற்பத்திக்கு  பயன்படுத்திய உற்பத்தி பொருட்களையும் கைப்ப ற்றியுள்ளனர்.
இதேவேளை தப்பிச்சென்ற கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடி க்கையினை தருமபுரம் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
SHARE