கிழக்கு முதல்வருக்கும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் இடை​யில் சந்திப்பு

290
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிருக்கும்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சப்னை ரெண்டிக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உட்பட இருபது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கிழக்கு மாகாண சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் சம்பூர் மக்களின் வாழ்வாதார விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, உலகவங்கி, உலக உணவுத்திட்டம், யுனிசெப் போன்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் அஸிஸ் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

இதில் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார திட்டங்கள் மேற்கொள்வது, சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், அத்தோடு வெளிநாடு செல்லும் பெண்களின் விகிதத்தை குறைக்க வேண்டும். போன்ற விடயங்களும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் எடுத்துக் கூறப்பட்டது.

அதற்கு ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியினர் கொண்ட குழுவினர் தாங்களும் வறவேற்பதோடு அதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.

SHARE