யாழ்.குப்பிளானில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.குப்பிளான் தெற்கு கிராமத்தில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து இரு வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சில சாதாரண கண்ணிவெடிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இப் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குறித்த கண்ணிவெடிகளை நேற்றய தினம் கண்டுபிடித்துள்ளதாகவும்,
இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் ஊர் மக்கள் குறித்த கண்ணிவெடிகள் போர்காலத்தவை எனவும் எதிரியை இலக்கு வைத்து புதைக்கப்பட்டிருந்த்தாகவும் கூறிகின்றனர்.