நிட்டம்புவ, வதுபிட்டிவல மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் கழிவுகளைக் கொட்டும் குழிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் இருந்துள்ளது.
இன்று காலை மருத்துவமனைக் கழிவுகளை குறித்த குப்பைக் குழிக்குள் கொட்டச் சென்ற ஊழியர் ஒருவர் குறித்த சடலத்தைக் கண்ணுற்று பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் என்று தெரிய வந்துள்ளது.
கொலைக்கான காரணம், கொலை செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.