குரங்கினால் பறிபோன உயிர்

153

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில்  குரங்கு ஒன்று பெண் ஒருவரை  கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள  காகிரனுல் பகுதியை சேர்ந்த 59 வயதான பூரான்தேவி என்பவர் இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக தாக்கி கடித்தது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து குரங்குகள் கடித்து குதறின.

படுகாயமடைந்த அவரால் எழுந்து ஓட முடியவில்லை. இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்துவிட்டு குறித்த பெண்ணை  மீட்டு தனியார் வைத்தியசாலையில்  அனுமதித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை திடீரென்று பாய்ந்து தாக்குகின்றன. தற்போது உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் பீதி நிலவுகிறது

SHARE