குற்றத்தை மூடி மறைத்த ஆதிவாசிகளின் தலைவர் பொலிஸ் நிலையத்தில்!

380

625.500.560.350.160.300.053.800.900.160.90

பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில எத்தோ கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு நேற்று சென்றுள்ளார்.

ஆதிவாசிகள் இனத்தைச் சேர்ந்த 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் மிகவும் பாரதூரமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை ஆதிவாசிகள் இனத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒன்றரை வருடமாக குறித்த இரு சிறுவர்களும் சந்தேகநபரின் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் ஒன்று கண்டி பொலிஸ் சிறுவர் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்காகவே ஆதிவாசிகளின் தலைவர் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தததாகவும், இந்த சம்பவம் தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவரும் அறிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் இவர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE