குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டும்

233

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு கயிறு தேடுவதனை விடவும், சமூகத்தை தூக்கிலிடவே வலுவான கயிறு தேட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறான குற்றவாளிகளை உருவாக்கும் சமூகமே தண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நபர்களை தூக்கிலிடுவதன் மூலம் சமூகத்தில் நிலவி வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களை தடுக்க ஒட்டு மொத்த சமூகமும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

SHARE