இன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது.
எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள்.
இவர்களுக்கான உபயோகக் குறிப்புகள்,
- குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று தேன், காலையில் எழுந்தவுடன் ஒரு சொட்டு தேனை குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும்.
- தினமும் இரவில் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள்.
- பின்னர் வெற்றிலையில் எண்ணெய் தடவி விளக்கில் காட்டி குழந்தையின் தொப்புள் மேல் வைக்க வேண்டும், இவ்வாறு செய்தால் வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.
- குழந்தை மலச்சிக்கலால் கஷ்டப்படும் போது வெந்நீர் கொடுக்கலாம் அல்லது 4 அல்லது 5 உலர்ந்த திராட்சையை வெந்நீரில் ஊறப்போட்டு அந்த நீரை கொடுத்தாலும் சுலபமாக இருக்கும்.
- சளி பிடித்திருந்தால் சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை போட்டு, அதை நெஞ்சில் தடவி வந்தாலும் சளி சரியாகும்.
- பொதுவாக குழந்தைகளுக்கு தினமும் காலையும், மாலையும் வெந்நீர் கொடுப்பது உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.