
குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு:-
* குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.
* தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.
* தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.
* தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்குமானால் தத்தெடுக்கும் தகுதியில்லை.
* இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.
* வருமான சான்றிதழ் தேவை.
* சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.
* தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதன் பிறகு “குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து இருக்க வேண்டும்.
* இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.