ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதேவேளை, இந்த பிக்குகள் ஐவரும் நேற்றைய தினம்(19) ஹோமாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேர தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த மாதம் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டிருந்த குறித்த பிக்குகள் ஐவரும் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.