குவைத் நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட புலம்பெயர்ந்த இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இந்த பிரச்சினை தொடர்பில்சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை தனக்கு கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பின்னர் அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டார் என்று முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் குறித்த இலங்கை பிரஜையை சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
“வாழ்த்து தெரிவிப்பதற்கு நான் அவரது கையை மாத்திரமே பிடித்தேன்”, என்று குறித்த இலங்கை பிரஜை விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கை பிரஜை குவைத் நகர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவரது இந்த செயற்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த இலங்கை பிரஜை குவைத்தில் சாரதியாக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.