‘லாபம் கொழிக்கும் காவி உடை‘ – கவர்ச்சி–ஆபாச–சினிமாநடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோதவியாக்யானம் (2)!
- குஷ்புவின் கீ–செயினும், ராதே மாவின் சூலமும்: நெயில் கட்டர் போன்ற கூரிய பொருட்களை கையில் எடுத்துச் செல்லும் பைகளில் இருக்கக் கூடாது என்பது தெரிந்த விசயம் தான்[1]. காம்பஸ், டிவைடர் போன்றவையே வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், சூட்கேஸில் போட்டு, கார்கோவில் இருக்கலாம். பலமுறை துபாய், கனடா, என்று ஜாலி டிரிப் அடித்து வரும் குஷ்புவுக்கு இதெல்லாம் தெரியவில்லை என்றால், சரியான ஜோக்குதான் எனலாம். சீக்கியர்கள் கத்தி வைத்துக் கொள்வது, ஆனந்த மார்க் துறவியர் சூலத்தை வைத்துக் கொள்வது முதலியன ஏற்கெனவே தடை செய்யப்பட்டது. ஆனால் 9” x 6” அளவில் கிர்பான் வைத்துக் கொள்ளாலாம் என்று விமானத்துறை பாதுகாப்பு பீரோ 2002ல் சுற்றறிக்கை மூலம் அனுமதித்துள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போலத்தான் ராதே மா விசயமும். இருப்பினும் ஆகஸ்டில் ராதே மா சூலத்துடன் விமான நிலையத்தில் வந்தபோது, அதனை எதிர்த்து போலீஸாருடன் புகார் கொடுத்துள்ளார்[2]. விசயங்களை, உண்மைகளை முழுவதுமாக அறிந்து கொண்டு பேச-எழுத் வேண்டும். ஆனால், திராவிட பாரம்பரியம், பெரியாரிஸம் என்று பேசுபவகள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆகவே அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு, இப்படி உணர்ச்சி வசப்பட்டு கொட்டியிருக்கும் வேலையை செய்திருக்க வேண்டாம்.
- ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய்உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடிஊடகங்களில் அடிபடுகிறார்கள்: “சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார்களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது என்பதே செயற்கையாக இருக்கிறது”, அதாவது அப்படித்தான் சிந்திப்பேன் என்று தீர்மானமாக இருந்தார் போலும்.. கடந்த 25 ஆண்டுகளாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், முல்லாக்கள் என்று கணக்குப் பார்த்தால், ஆயிரக்கணக்கானவர் பலவித செக்ஸ்-குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள், கொக்கோக-பாலியல் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளார்கள், தினம்-தினம் அத்தகைய பலான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்கு ஒன்று கூட தென்படவில்லை என்பது ஆச்சரியமே! ஆனால், ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்களாம். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்சணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக்கின்றனவாம். இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேகரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல, என்றெல்லாம் எழுதினால், மற்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ?. பாரபட்சம் மிக்க இத்தகைய எழுத்துகள், தீர்மானித்து எழுதியவைப் போன்று தெரிகின்றன.
- கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர்எதற்கு?: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைத்தான் கேட்க வேண்டும். அங்கு தான் “பாவ மன்னிப்பு” என்று இடையில், கத்தோலிக்க சாமி வந்து, விவரங்களை அறிந்து கொண்டு, மன்னிப்பு கேட்கும் பெண்களையே மேய்ந்து விடுகிறார்கள். காஜி-முல்லா-மௌல்விக்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். “லா இல இல்லால்ல மொஹம்மது ரசுரல்லா” என்றால், முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்து, இன்றும் முஸ்லிம் சகோதரர்களுடன் தொடர்பு வைத்துள்ள நகத்துக்கு, அர்ஹனுக்கு, குஷ்புவுக்கு நம்மைவிட நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால், அவற்றைப் பற்றி பேசமாட்டார். ஏனெனில், ரஹ்மானுக்கு போட்டால் போல இந்த நடிகைக்கும் பத்வா போட்டு விடுவார்கள் என்ற பயம் போலும். பெரியாரிஸ்டுகள் எப்படி முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களுடன் தாஜா செய்து, கூடிக்குலவி நாத்திக ஆட்டம் போட்டார்களோ, அதேபோல குஷ்பு இப்பொழுது, செக்யூலரிஸ குத்தாட்டம் போட்டிடுக்கிறார் போலும். “சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்”, என்று முடித்திருக்கும் குஷ்புவுக்கும் கொண்டாட்டம் தான்!.
- கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள்தழைத்தோங்குன்றன: அதாவது, ஒரு வேளை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களது மதங்களையே கம்பெனிகள் தாம், லிமிடெட், பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று சூசகமாக எடுத்துக் காட்டியுள்ளார் போலும். கார்பரேட் மதங்களாகவே இருக்கும் போது, அதிலிருக்கும் எல்லோருமே கார்பரேட் மதத்தலைவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால் தான் வாடிகன் பேங்கே உள்ளது. ஷரீயத் பேங்குகள் என்று இவர்களும் வைத்துக் கொண்டுள்ளார்கள். அங்கு நடந்த, நடக்கும், ஊழல்களு, மோசடிகள், பிராடு வேலைகள் ஊடகங்களில் உலக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்குத் தெரியவில்லை. அவர்களது நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் காட்டவே முடியவில்லை போலும், அதனால், இங்குள்ள மூடநம்பிக்கைகள் என்று குறிப்பிடுகிறார்! இருப்பினும் அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை, என்று தமிழ்.ஒன்.இந்தியா ஆமாம் போட்டிருக்கிறது.
- கார்பரேட் சாமியார்களின் வருட வருமானம்: கிறிஸ்தவ கார்பரேட்டுகளின் மோசடிகௐ கோர்ட்டுகளுக்குச் சென்று நாறுகின்றன. கேரளாவிலோ, சர்ச் எனக்கா-உனக்கா என்று சண்டை போட்டு கோர்ட்டுக்குச் சென்றுள்ளன. மில்லியன் கணக்கில் வரும் பணத்தை ஏய்த்து ஜாலியாக ஜல்ஸா செய்து கொண்டிருக்கிறாற்கள். அவையெல்லாம் பல கட்டுரைகள் மூலம் www.christianityindia.wordpress.com மற்றும் www.islamindia.wordpress.com இணைதளங்களில் பல கட்டுரைகளில் விளக்கமாகக் கொடுத்துள்ளதால், இங்கு அவற்றை திரும்ப விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தாம் அந்நிய செலாவணி சட்டம், அந்நிய நிதி பெறுதல் மற்றும் கட்டுப்பாடு சட்டம் முதலியவற்றை ஏய்த்து வருகிறார்கள். அவர்கள் தங்களது வருமானத்தையே காட்டுவதில்லை, அதாவது, அந்த உரிய சட்டங்களின் கீழ் தாக்கல் செய்ய வேண்டிய வருடாந்திர கணக்கு விவரங்கள், சான்றுகள் முதலிவற்றை தாக்கல் செய்வதே இல்லை. மேலும், நடிகையாக இருக்கும் இவர், சேவை வரி கட்ட மாட்டேன் என்று மற்றவர்களுடன் கொடிபிடித்தது, போராட்டம் நடத்தியது முதலியவை ஞாபகம் இல்லை போலும்.
- கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாணசாமியார்களின் அட்டகாசங்கள்: குஷ்புவின் காழ்ப்பு, வெறுப்பு, தூஷணம் முதலியவை இங்கு வெளிப்பட்டுள்ளன. கால் நிர்வாணமாக நடிப்பது, அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது, படுக்கை அறை காட்சிகளில் கொக்கோக உணர்ச்சிகள் தூண்டும் வகையில் நடிப்பது-நடந்து கொள்வது முதலியவை குஷ்பு போன்ற நடிகைகளுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். இதனால், சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, சஞ்சிகைகளில் புகைப்படங்கள் போட்டு காட்டியிருப்பதும் தெரிந்த விசயமே. ஜினாகட் நங்கா சாதுக்களின் நடனத்தை இங்கு இழுத்திருப்பது, குஷ்புவின் வக்கிரத்தைத் தான் காட்டுகிறது. “பாவநாத் கண்காட்சி” என்பது, வருடா வருடம் அங்கு நடக்கிறது என்பது தெரிந்த விசயமே[3]. முற்றும் துறந்த அந்த சந்நியாசிகளில் ஆண்டு முழுவதும், மலைமேல் வாழ்ந்து, ஒரே முறை, இந்த விழாவில் பங்கு கொள்ள இறங்கி வருகிறார்கள். கத்திகளுடன் அவர்கள் ஆடும் நடனம் சிறப்புப் பெற்றது. அது லட்சக்கணக்கான மக்கள் முன்பாக நடக்கிறது. யாரும் குஷ்புவைப் போல, விரசத்துடன் யோசித்துப் பார்த்ததில்லை. ஆபாச நடிகையாக இருந்ததினால், அந்நடிகைக்கு அத்தகைய மோசமான எண்ணங்கள் வந்து, இவ்வாறு கேவலமாக தனது சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார் போலும்.
- கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளைநம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது[4]: “என்னைப்பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதேசமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது.அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடையநம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்குகர்வமும் உண்டு; திமிரும் உண்டு!”, “இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார் என்று தமிழ்.ஒன்.இந்தியா முடித்துள்ளது[5].
என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. | கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை, என்பது தானாக கூறியுள்ளது, அதனால், அடுத்தவருக்கு எப்படி புரியும் என்று விளக்கவில்லை[6]. |
அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. | இந்த கட்டுரை மூலமே அந்நடிகையின் நிலை வெளிப்பட்டுவிட்டது. |
அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. | மொஹம்மது கூறியதை, கூறியுள்ளார் போலும். ஆக, தான் ஒரு முஸ்லிம் என்பதனை நிரூபிக்கிறார் போலும். |
நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு! | ஆமாம், அதுதான் படித்துப் பார்த்தாலே தெரிகிறதே! |
வழக்கம் போல அலுத்துப் போன சித்தாந்தத்தை அவிழ்துப் போட்டுள்ளார். இதை யாரும் கண்டுகொள்ள போவதில்லை. சினிமாவில் வேண்டுமானால் வேகும், இங்கு வேகாது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், கூடிய சீக்கிரத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய் விடும் என்று தீர்மானித்து, இந்நடிகை செயலில் இறங்கியுள்ளது தெரிகிறது.
தமிழினி வீரலட்சுமியின் குஷ்பு–எதிர்ப்பு[7]: நடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் குஷ்புவின் தொடர் ஒன்றை வெளியிடவிருக்கிறது நக்கீரன் ஏடு. ஏற்கெனவே குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட தமிழர் முன்னேற்றப் படை என்கிற அமைப்பு. நக்கீரன் ஏடு குஷ்பு தொடரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. தொடரை வெளியிட்டால் நக்கீரன் அலுவலம் முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: “ஒரு கட்சியின் தலைவரின் அரசியல்அறிவை அங்கத்தின் ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்க முடியாது,அகத்தின் ஆராய்ச்சியால் தான் கண்டுப்பிடிக்க முடியும். இதைஉணர்ந்து நக்கீரன் வார இதழ் செயல்பட வேண்டும். தமிழர்பண்பாட்டை சீர் அழிக்க வந்த கள்ளத்தோனி கவர்ச்சி நடிகைகுஷ்பு!!! தமிழரின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், வாழ்வியல்நெறி, இவற்றிக்கு எதிராக பேசியும் செயல்ப்பட்டு வருபவர் கவர்ச்சிநடிகை குஷ்பு இவரை பற்றி நக்கீரன் வார இதழில் தொடர்கட்டுரையை எழுதி வெளியிடுவதின் மூலம் குஷ்புவின்செய்கையை நக்கீரன் வார இதழ் ஊக்கப்படுததுவது போல் உள்ளது.இது தமிழக தமிழர்களையும்,உலக தமிழர்களையும்,மிகவும்வேதனைப்படுத்தும் பெரும் செயலாகும். நக்கீரன் வார இதழ்குஷ்புவின் தொடர் கட்டுரையை வெளியிட்டால் நக்கீரன் பத்திகைஅலுவலகம் எதிரில் எனது தலைமையில் தமிழர் முன்னேற்றபடையினர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் அமருவோம்”, தமிழினி, கி.வீரலட்சுமி, தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் முன்னேற்ற படை. உண்ணாவிரதம் இருந்தாரா, சாகும் வரை இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், மக்கள் தங்கள் பெயர் வரவேண்டும் என்று யாதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள் போலும்!