கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன: முன்னாள் போராளி.

341

 

யாழ்.தேர்தல் களத்தில் 15 கட்சிகள், 6 சுயேற்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக 21 கட்சிகளின் 210 வேட்பாளர்கள், 7 வேட்பாளர்களை வெற்றபெற வைப்பதற்கு களமிறங்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.

உண்மையாக போராடியவர்கள், தேசத்தை நேசித்தவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துகின்ற வேளை,  தமிழ்த் தேசியத்திற்குச் செல்லும் வாக்குகளை இல்லாதொழிக்க தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் லட்சக்கணக்கில் பணங்களைப் பெற்று வந்துள்ளார்கள்.

நாங்கள் முன்னாள் போராளிகள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்கின்றார்கள். உண்மை அதுவல்ல. அவர்கள் முன்னாள் போராளிகளும் அல்ல என முழங்காவிலில் இடம்பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் போராளியொருவர் தெரிவித்தார்.

SHARE