கூட்டமைப்புடன் பேசிய ரணில்

188

வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்திச் செயலணிக் கூட்டம் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் எந்தத் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என்று அறிய முடிகின்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரமே பங்கேற்றார் என்றும், அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் கலந்துரையாடினர் என்று கூறப்படுகின்றது.

ஊரக எழுச்சித் திட்டம் தொடர்பாகவும், ஐ ரோட் திட்டம் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. ஐ ரோட் திட்டங்கள் மே அல்லது ஜூன் மாதமளவில் ஆரம்பிக்கும் என்று தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, பருத்தித்துறை – கொடிகாமம் வீதி என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சீரமைப்பது என்று கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

SHARE